Friday, May 1, 2026

003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை

 

003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை 

(இயல்வது கரவேல்)


இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நாள்.  


நாகேந்திரனின்  அம்மா அவனுக்கு பள்ளிக்கு  தேவையான அனைத்தையும் எடுக்க உதவினார்.


நாகேந்திரனின் அம்மா:- நாகேந்திரா, இன்னொரு கால்குலேட்டர் எடுத்துக்கோ திடீர்னு வேலை பாக்காம போச்சன்னா  என்ன பண்ணுவ?


நாகேந்திரன் எண்ணமோ  இன்னும் நேற்று லட்சுமி சொன்ன மயிலானையே  மனதில் ஓடியது.  நல்லதம்பி மயிலானையை பள்ளிக்கு கூட்டிக் கொண்டு வருவானா  என்று தெரியாது எனவே வேகமாக நல்லதம்பி  வீட்டிற்கு சென்று பார்க்க நினைத்தான். 


அப்படி யோசித்துக் கொண்டு இருந்த நாகேந்திரன், அம்மாவிடம், ஒன்னும் பிரச்சன இல்லை  கால்குலேட்டர் ஈஸியா போகாது நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்


நாகேந்திரனின் அப்பா :  நீ கார்ல போய் ஸ்கூல்ல இறங்கிட்டு கார அனுப்பி விடு நானும் அம்மாவும்  அப்புறம் ஆபீஸ் போறோம்  என்றார்


நாகேந்திரன் லட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டு,  கார் ஓட்டுநர் மணிகண்டன் அவர்களிடம் ஓகே டிரைவர், நான் பள்ளிக்கு லட்சுமி கூட போய்க்கிறேன் - நீங்க கிளம்புங்க என்றான். 


லட்சுமி பள்ளிக்கு தயாராகி, அழுதுகொண்டு இருந்தால்.  

நாகேந்திரன்:  என்ன ஆச்சு?

லட்சுமி : என்னோட கால்குலேட்டர காணாம்.  அம்மா நான் தொலைச்சுட்டேன்னு சொல்றாங்க - நான் தொலைக்கால - பையில்தான் வைத்து இருந்தேன் …


நாகேந்திரன்:   சரி சரி வா நல்லதம்பி வீட்டில் ஒரு கால்குலேட்டர் வாங்கிக் கொள்ளலாம் .

  • என்று கிளம்பி இருவரும் நல்லதம்பி வீட்டை அடைந்தார்கள் 


நல்லதம்பி : வா லட்சுமி, நாகேந்திரா … 


லட்சுமி - நல்லதம்பி ஒரு பரீட்சைக்கு ஒரு கால்குலேட்டர எனக்கு தா …  என்னோடத காணாம் …


இதைக்கேட்ட நல்லதம்பி அம்மா தேன்மொழி, “இந்தாம்மா கால்குலேட்டர்.  லட்சுமி, உன்னத கண்டுபிடிச்ச உடன் திருப்பி கொடு”


நாகேந்திரன்: “இவள் எதையுமே பத்திரமா வச்சுக்க மாட்டா … பாருங்க உங்க கால்குலேட்டரயும் தோழிக்க போரா …


நல்லதம்பி : அம்மா நாகேந்திரன் சொல்றமாதிரி அவ நம்மதையும் தொலச்சுட்டா?


நல்லதம்பி அம்மா தேன்மொழி: அப்படி எல்லாம் அவ தொலைக்க மாட்டா - ஏதோ வச்ச எடத்த மறந்துட்டா இல்லன்னா அவ அக்கா யாராவது எடுத்து இருப்பாங்க - சொல் மறந்து இருப்பாங்க.


தேவைப்படரப்ப நாம உதவனும். இதைத்தான் அவ்வையார் ஆத்திசூடியில் “இயல்வது கரவேல்” அப்படின்னு சொல்லி இருக்கார். தேன்மொழி அவனுங்க சொல்றமாதிரி தொலைச்சுராம பத்தரமா வச்சுக்க.


நாகேந்திரன் : நல்லதம்பி இதவிடு. நான் இங்க வந்ததே, நீ ஏதோ மயிலானை வச்சு இறுக்கியா ?


லட்சுமி நாகேந்திரனை பார்த்து கேட்டாள்:

“நேத்து நீ சொன்ன அந்த… மயிலானை… அது என்ன?”

நாகேந்திரன் சிரித்தான். “அது அவன் கற்பனை தான்!”

அப்போதே…

நல்லதம்பியின் அறையில் இருந்த மயிலானை, மெதுவாக பறந்து வந்து அவன் தோளில் உட்கார்ந்தது!

“பார்! இதுதான் மயிலானை!” என்று நல்லதம்பி மகிழ்ச்சியாக காட்டினான்.

ஆனால்…

“எங்கே?” என்று லட்சுமி குழம்பினாள்.

“நல்லதம்பி… ஏதோ விளையாட்டு பண்ணாதே…” என்றான் நாகேந்திரன்.

அந்த நேரம் நல்லதம்பியின் அம்மா வந்தார்.

“என்னடா இது? லட்சுமி சொல்றா… நீ ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கியா?”

“அம்மா… உண்மையா சொல்றேன்…”

“சரி போதும்… மாலைக்கு டாக்டரிடம் போயி கேட்கலாம்… ஏதோ பயந்துட்டான் போல இருக்கான்…” என்றார்.


நல்லதம்பிக்கு உடம்பே நடுங்க ஆரம்பித்தது…

அவன் ஓடிக் கொண்டு அறைக்குள் போனான்.

“மயிலானை… ஏன் யாருக்கும் தெரியல?”

மயிலானை மெதுவாக பேசினது:

“நான் மறைவு ஆற்றல் உடையவன்… என்ன காப்பாத்தியது நீங்களும் பப்புவும்… அதனால உங்களுக்குத்தான் நான் தெரியும்…”

“எனக்கு பயமா இருக்கு… எல்லாரும் என்ன பைத்தியம்னு நினைப்பாங்க…”

“பயப்படாதே நல்லதம்பி…” என்றது மயிலானை.

“நான் இப்போ போகிறேன்… ஆனா உனக்கு எப்போ வேண்டுமானாலும் உதவி வேண்டும்னா…”

“மயிலானை வா! மயிலானை வா!! நல்லதம்பி அழைக்கிறேன் மயிலானை வா!”ன்னு கூப்பிடு… நான் உடனே வருவேன்…”

நல்லதம்பி மெதுவாக தலையசைத்தான்.

அடுத்த நொடி…

மயிலானை அவன் கண் முன்னே பறந்து போனது!

பப்பு மகிழ்ச்சியாக வாலை ஆட்டி அதைப் பார்த்தது…


அடுத்த நாள் — பள்ளியில்

“இன்று விளையாட்டு period இல்ல!” என்று ஆசிரியர் சொன்னார்.

“ஏன் மேடம்?” என்று மாணவர்கள் கேட்டனர்.

“அபி அய்யா இந்தியா போயிருக்காங்க… அவருக்கு பதிலா வரவேண்டிய PET சாருக்கு உடம்பு சரியில்லை…”

மாணவர்கள் எல்லாம் அமைதியாக அமர்ந்தனர்…

ஆனால் நல்லதம்பி மட்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்…

“மயிலானை… உண்மையிலேயே மீண்டும் வருமா?” என்று மனதில் கேட்டுக்கொண்டான்…


“நேற்றைய கதையின் கேள்விக்கான பதில்:”

(அலெக்சாண்டர் ஒரு விருந்தில் கோபத்தில் தனது நெருங்கிய நண்பர் Cleitus the Black-ஐ கொன்றதாக வரலாறு கூறுகிறது.

👉 முடிவு:

  • பிறகு ஆழ்ந்த வருத்தம்

  • நண்பன் திரும்ப வரவில்லை

பாடம்:
கோபத்தில் செய்த செயலை ஆயுள் முழுவதும் சுமக்க வேண்டி வரும்.)

🔍 இந்தக் கதைக்கான கேள்வி (Knowledge based):

Calculator-ல் நாம் கணக்கை சேமித்து வைத்துக்கொள்ள எந்த பொத்தானை (button) பயன்படுத்துவோம்?
(A) ON
(B) AC
(C) M+
(D) =


📘 அடுத்த கதையில் பதில்…

003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை

  003-1-03 - கொடுப்பதால் குறைவதில்லை  (இயல்வது கரவேல்) இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நாள்.   நாகேந்திரனின்  அம்மா அவனுக்கு பள்ளிக்கு  தேவ...